இயற்கை அனர்தத்தினால் பாதித்தோருக்காக நடத்தப்படவுள்ள சர்வமத பிரார்த்தனை!

இயற்கை அனர்தத்தினால் உயிர் நீத்தவர்களின் ஆத்மா சாந்தியடைவதற்காகவும், பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் வழமையான நிலைக்கு திரும்புவதற்காகவும் சர்வ மத வழிபாடுகள் இன்று மற்றும் நாளை நடத்தப்படவுள்ளது.
அதன்படி,
ஹுணுபிட்டிய, கங்காராமய விகாரையில் பிரித் பாராயணம் இன்று இரவு 8.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
ஹுணுபிட்டிய, கங்காராமய விகாரையில் பௌத்த மத காலை நேர ஆராதனை, நாளை காலை 06.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
பம்பலபிட்டிய, வஜிரா கோவிலில் (பழைய ஸ்ரீ கதிரேஷன் கோவில்)விசேட இந்து வழிபாடு இன்று மு.ப. 9.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
வெள்ளவத்தை ஜும்ஆ பள்ளிவாசலில் இஸ்லாம் மத வழிபாடுகள் இன்று பி.ப. 3.45 மணிக்கு இடம்பெறவுள்ளது.
கொழும்பு 08, சென் பாவுலு தேவஸ்தானத்தில் கிறிஸ்தவ மத ஆராதனைகள் இன்று பி.ப. 7.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
கிராண்பாஸ், சென் ஜோசப் ஆலயத்தில் கதோலிக மத ஆராதனைகள் நாளை பி.ப. 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
![]()