பலதும் பத்தும்

தனது கிறிஸ்துமஸ் பண்டிகை செய்தியை வெளியிட்ட வேல்ஸ் இளவரசி!

வேல்ஸ் இளவரசி தனது வருடாந்திர கிறிஸ்துமஸ் கரோல் சேவைக்கு முன்னதாக ஒரு பண்டிகை செய்தியை வெளியிட்டுள்ளார்.

இதில் அன்பின் முக்கியத்துவத்தையும் நிச்சயமற்ற காலங்களில் ஒருவருக்கொருவர் இணைவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

இந்தக் கடிதம் கிறிஸ்துமஸ் உணர்வு பிரம்மாண்டமான அல்லது உணர்ச்சிபூர்வமான சைகைகளில் இல்லை, மாறாக மிக எளிய, மனித வழிகளில் உருவாகிறது என்று வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

ஒரு வார்த்தை ஆறுதல் அல்லது செவிமடுத்தல் போன்ற சிறிய கவனிப்புச் செயல்களின் வலிமையே வாழ்க்கையின் கடினமான நேரங்களில் நம்பிக்கையையும் புரிதலையும் வழங்குகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மென்மையான செயல்கள் அனைத்தும் நாம் அனைவரும் அங்கம் வகிக்கும் வாழ்க்கையின் அழகான பயணத்திற்கு பங்களிக்கின்றன என்று இளவரசி கேட் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

இந்தக் கருத்து ஐந்தாவது ஆண்டு “கிறிஸ்துமஸில் ஒன்றாக” என்ற நிகழ்வின் மையக் கருப்பொருளாக செயல்படுவதுடன் மேலும் இந்தச் சேவை (Westminster Abbey.) வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் இளவரசர் வில்லியம்( William) மற்றும் பல்வேறு கலைஞர்கள் பங்கேற்புடன் நடைபெற உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button