உலகம்

தீவிரமடையும் ஈரான்-இஸ்ரேல் மோதல்!! ஐ.நா. பாதுகாப்பு பேரவை அவசர கூட்டத்திற்கு அழைப்பு

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போர் தீவிர நிலையை எட்டியுள்ளதை தொடர்ந்து இருநாடுகளும் ஒன்றையொன்று கடுமையாக தாக்கி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ஈரான் ஏவிய ஒரு ஆளில்லா விமானத்தை இஸ்ரேல் விமானப்படை கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது.

அத்துடன், தலைநகர் தெஹ்ரானில் உள்ள ஈரானிய உள்நாட்டு பாதுகாப்பு தலைமையகத்தை அழித்ததாகவும் இஸ்ரேல் அறிவித்துள்ளது என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மூத்த அதிகாரிகளுடன் ஈரானுக்கான தாக்குதல் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும், ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை கைவிடுமா என்பதைப் பார்க்க டிரம்ப் கடைசி நிமிடம் வரை காத்திருப்பதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

இதற்கிடையில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி அமெரிக்காவை அச்சுறுத்தி, ஒருபோதும் சரணடைய மாட்டேன் என்று அறிவித்தது குறித்து செய்தியாளர்கள் அமெரிக்க ஜனாதிபதியிடம் கேள்வியெழுப்பினர்.

ஈரான் சரணடையவில்லை என்றால், அவர்களுக்கு “நல்வாழ்த்துக்கள்” ஈரானிய தலைவரை வாழ்த்துவதாக டிரம்ப் கூறியுள்ளார்.

இதற்கிடையில், தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இன்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவையின் அவசர அமர்வு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான், ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் மற்றும் அல்ஜீரியாவின் வேண்டுகோளின் பேரில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் இஸ்ரேலும் பங்கேற்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், ஈரான்-இஸ்ரேல் மோதல் தொடர்பான முடிவை இரு நாடுகளின் தலைவர்களிடமே விட்டுவிட வேண்டும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கூறியுள்ளார்.

ஈரான் ரஷ்யாவிடம் உதவி கேட்டதா என்று செய்தியாளர்கள் புடினிடம் கேள்வியெழுப்பியிருந்தனர்.

“எங்கள் ஈரானிய நண்பர்கள் இது குறித்து எங்களிடம் கேட்கவில்லை” என்று ரஷ்ய அதிபர் பதிலளித்ததாக வெளிநாட்டு ஊடகச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button