அவுஸ்திரேலியாவில் 10 வயது சிறுவர்களையும் சிறையில் அடைக்கும் திட்டம் அறிவிப்பு!

அவுஸ்திரேலியாவின் வடக்குப் பிரதேசம் (NT) குற்றப் பொறுப்பின் வயதைக் குறைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.

புதிய சட்டம் 10 வயது அல்லது அதற்கு மேற்பட்ட சிறுவர்கள் சிறையில் அடைக்க அனுமதிக்கிறது.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கன்ட்ரி லிபரல் கட்சி (CLP) அரசாங்கத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்த நடவடிக்கை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கொள்கையை மாற்றியமைக்கிறது.

முன்னதாக சிறுவர்களை சிறையில் அடைப்பதற்கான வயது எல்லை 12 அல்லது அதற்கும் மேலாக காணப்பட்டிருந்தது.

இந்த நிலையில், புதிய தீர்மானமானது அதிகரித்து வரும் இளைஞர்களின் குற்ற விகிதங்களை குறைக்கும் என்று நம்பப்படுகிறது.

எனினும், மனித உரிமைக் குழுக்கள், மருத்துவ வல்லுநர்கள் மற்றும் பழங்குடியின அமைப்புகள் இந்த நடவடிக்கையைக் கண்டித்துள்ள நிலையில், இந்த முடிவு கடுமையான விவாதத்தைத் தூண்டியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button