புண்ணிய பலன்களை தரும் புரட்டாசி மாத பெளர்ணமி!

புரட்டாசி மாத பெளர்ணமியில் செய்யப்படும் வழிபாடு ஏகாதசி விரத வழிபாட்டிற்கு இணையான பலன்களையும் நமக்கு தரும் என்று சொல்லப்படுகிறது.

வாழ்க்கையில் ஏற்றமும், புண்ணிய பலன்களும் தரக் கூடியது புரட்டாசி மாத பெளர்ணமி ஆகும்.

ஒவ்வொரு மாதத்திலும் வரும் பவுர்ணமி திதி சிறப்புக்குரியதாகும். ஆனால் பெளர்ணமி வரும் மாதங்கள் மற்றும் கிழமைகளின் அடிப்படையில் அதன் சிறப்புகள் மட்டுமின்றி, வழிபாட்டு பலன்களும் மாறுபடும்.

அதிலும் இந்த ஆண்டு புரட்டாசி மாதப்பிறப்பு நாளுடன் பெளர்ணமி இணைந்து வந்திருப்பது கூடுதல் சிறப்புக்குரியதாகும்.
புரட்டாசி மாத பெளர்ணமியில் பெருமாளையும்,
குலதெய்வங்களையும் மனதார வழிபட்டு வந்தால் மகத்தான பலன்களைப் பெறலாம்.

பெளர்ணமியானது சிவன், விஷ்ணு இருவருக்குரிய உகந்த வழிபாட்டு நாளாகும். அதே போல் புரட்டாசி மாதமும் பெருமாள் மற்றும் அம்பிகை வழிபாட்டிற்கு உரியதாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button