விஜயவாடாவில் அமித் ஷாவை சந்தித்த செந்தில்; இலங்கைக்கு வருமாறு அழைப்பும் விடுத்தார்

இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதார, இரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் மற்றும் பா.ஜ.கவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இந்திய மக்களை தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்கு மற்றும் மோடியின் மூன்றாவது முறை தொடர்ச்சியாக ஆட்சிக்கு வாழ்த்துக்களை இதன்போது செந்தில் தொண்டமான் வாழ்த்து தெரிவித்த்தார்.

மேலும், இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து அளித்து வரும் உதவிகளுக்கு நன்றி தெரிவித்ததோடு, இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அமித்ஷாவுக்கு அழைப்பு விடுத்தார்.

பொருளாதார அபிவிருத்தி தொடர்பான இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்தும் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல் மேற்கொண்டார்.

இலங்கை பெருந்தோட்ட சமூகத்தின் 200ஆவது ஆண்டு நினைவு முத்திரையையும் அவர்களுக்கு வழங்கி வைத்தார்.

Oruvan

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button