சிங்கப்பூர் ஆசியாவின் அதிசயம்!… ஜீவன்.

இலங்கையை பார்த்துத்தான் சிங்கப்பூரை லீ அவர்கள் உருவாக்கினார்கள் என தவறாக கருத்துகளை முன்வைக்கிறார்கள்.
அவர் இலங்கையில் இருந்த இன பிரச்சனையை பார்த்து இப்படி , சிங்கப்பூர் ஆகிவிடக் கூடாது என மிக கவனமாக கையாண்டார்.
அதாவது சிராங்கூனிலிருந்த இந்திய – இலங்கையர் அதிகமாக வாழ்ந்த லிட்டில் இந்தியா , சீனர்கள் வாழ்ந்த சைனா டவுண் , மலாயர் மற்றும் இஸ்லாமியர் வாழ்ந்த அரப் தெரு ஆகியவற்றை தவிர , எங்குமே தனித்து ஒரே இனம் குழுவாக வாழ விடாமல் , கலந்து வாழும் முறையில் தொடர் மாடிக் கட்டிடங்களை அமைத்து , கலந்தே மக்களை குடியமர்த்தினார். பல்லின கலாச்சாரத்தால் சிங்கப்பூரில் இன பிரச்சனைகள் தோன்றவோ அல்லது தலை தூக்கவோ இல்லை. அப்படி குழப்பம் விளைவித்தோர்கள் சூரிய உதயத்தை மீண்டும் பார்க்கவே இல்லை. வன்முறை மற்றும் வேலை நிறுத்தம் செய்வது போன்றவை அடியோடு இல்லாதொழிக்கப்பட்டது.
ஒருமுறை மேலே குறிப்பிட்ட இனக் குழும பகுதிகளை இல்லாதொழிக்க வேண்டும் எனும் நோக்கம் , லீ அவர்களுக்கு ஏற்பட்ட போது , ஆரம்ப கால சரித்திர சின்னங்களாக அவை இருக்கட்டும் என தெரிவித்த பலரது வேண்டுகோளை அவர் செவிமடுத்து விட்டு விட்டார். ஆனால் ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்படின் அவற்றை இல்லாதொழிக்க தயங்கப் போவதில்லை என்பதையும் தெரிவித்தார்.
வெளிநாடுகளது தொழில் துறைகளை சிங்கபூருக்குள் அனுமதித்ததால் மட்டும் சிங்கப்பூர் வளமாகவில்லை. சிக்கலே இல்லாத அமைதியான நாடு என்ற நிலை காரணமாக, அநேக தேசங்கள் அச்சமின்றி முதலீடு செய்தமையாலும்தான் சிங்கப்பூர் ஆசியாவின் அதிசயமானது.
சிங்கப்பூரின் சிற்பி எனக் கருதப்படும் மறைந்த தந்தை , லீ குவான்யூ அவர்களது அர்ப்பனிப்பிலும் , அயராத சிந்தனையிலும் உருவானதுதான் மஞ்சுளா சிங்கப்பூரா.
குடிக்க தேவையான தண்ணீரே இல்லாத ஒரு நாடு , ஆசியாவிலே சிறந்த நாடாக தேர்வாகியுள்ளது.
அறி­வார்ந்த நக­ரங்­க­ளுக்­கான தர­வ­ரி­சைப் பட்­டி­ய­லில் இவ்­வாண்டு சிங்­கப்­பூர் உலக அள­வில் 7வது இடத்­தை­யும் ஆசிய நக­ரங்­களில் முதல் இடத்­தை­யும் பிடித்­துள்­ளது.
உயர் வாழ்க்­கைத் தரத்தை எட்­டு­வ­தில் உள்ள சவால்­களை எதிர்­கொள்ள நக­ரங்­கள் தொழில்­நுட்­பத்தை எவ்­வாறு பயன்­ப­டுத்­தித் தீர்வு காண்­கின்­றன என்­ப­தன் அடிப்­ப­டை­யில் தர­வ­ரி­சைப்­ப­டுத்­தப்­பட்ட பட்­டி­யல் நேற்று வெளி­யி­டப்­பட்­டது.
சுவிட்­சர்­லாந்து வணி­கக் கழ­கத்­தின் நிர்­வாக மேம்­பாட்­டுக் கழ­கம் (ஐஎம்டி) வெளி­யிட்ட இந்­தப் பட்­டி­ய­லில் 141 நக­ரங்­கள் இடம்­பெற்று உள்­ளன.
சுவிட்­சர்­லாந்­தின் ஸுரிக் நக­ரம் முத­லி­டத்­தைப் பிடித்­துள்­ளது. நார்­வே­யின் ஓஸ்லோ இரண்­டா­மி­டத்­தை­யும் ஆஸ்­தி­ரே­லி­யா­வின் கேன்­பரா மூன்­றா­மி­டத்­தை­யும் பிடித்­துள்­ளன.
– ஜீவன்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button