கவிதைகள்

நெஞ்சார இறைவேண்டி வாழ்த்துகிறேன் நானும்!… கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

அம்பி ஐயா பாட்டு அழகான பாட்டு

அன்பு பண்பு அள்ளித்தரும் அழகானபாட்டு

மண்மணக்க வாசந்தரும் மகத்தான பாடு

பாடிநிற்கும் அம்பி ஐயா பல்லாண்டுவாழ்க  !

தொட்டவுடன் தமிழ்மணக்கும் சுந்தரமாம் பாட்டு

கட்டழகுச் சொற்களுடன் கலகலக்கும் பாட்டு

இட்டமுடன் படிப்பதற்கு ஏற்றதமிழ்ப் பாட்டு

இன்பமுடன் என்னாளும் அம்பிஐயா வாழ்க ! 

ஆங்கிலத்தில் கவிபுனையும் ஆற்றல்மிகு ஐயா

ஆனந்தம் அகமகிழ்வு பெறவேண்டும் வாழ்வில்

நீள்புவியில் நீண்டசுகம் பெறவேண்டும் என்று

நெஞ்சார இறைவேண்டி வாழ்த்துகிறேன் நானும் !

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *