கதைகள்
”கடவுளே நீ இங்கேயா இருக்க..?”…. ( மினிக் கதை )

ஒரு பிச்சைக்காரன் கோயிலுக்கு முன்பு அமர்ந்து பிச்சை எடுத்துக் கொண்டு இருந்தான். அங்கு வரும் மக்கள் ஒரு ரூபாய் மட்டும் போட்டார்கள்.
போதிய வருமானம் இல்லாமல் கடை வீதிக்கு சென்றான். அங்குள்ள மதுபான கடை முன்பு அமர்ந்து பிச்சை எடுத்தான். அங்குள்ள குடிமகன்கள் பத்து, இருபது ரூபாய் தாள்களை போட்டனர்.
மேலும் ஓசியில் மதுவும் கிடைத்தது. போதையில் பிச்சைக்காரன் சொன்னான் “தெய்வமே நீ இங்கேயா இருக்கே, நான் இவ்வளவு நாளா நீ கோவில்ல இருக்கிறாய் என்றல்லவா நினைத்திருந்தேன்…” என்றான்.
![]()