கவிதைகள்

காத்திட வேலை ஏந்தி கந்தனாய் அமைந்த தெய்வம் !…. ( கவிதை …. கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

கந்தசஷ்டி சிறப்புத் துதி 6 ம் நாள்!…

ஆதியாய் நடுவும் ஆகி
  அளவிலாப் பொருளும் ஆகி 
சோதியாய் நிற்கும் தெய்வம் 
   சுருதியாய் ஆன தெய்வம் 
காதலாய் பரவி நின்றால்
   கருணையை ஈயும் தெய்வம்
காத்திட வேலை ஏந்தி 
   கந்தனாய் அமைந்த தெய்வம் ! 
 
கலியுகம் போற்றும் தெய்வம்
     காலனை விரட்டும் தெய்வம்
நிலையினை இழக்கா வண்ணம்
    நிம்மதி நல்கும் தெய்வம்
ஒருதரம் நினைத்தால் போதும்
    உயர்வினை அளிக்கும் தெய்வம்
அருவுரு ஆன தெய்வம் 
       அகிலத்தில் கந்தன் அன்றோ  ! 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *