கவிதைகள்

சரவணப் பொய்கை தோன்றி சன்மார்க்கம் தளைக்க வந்தார்!…. ( கவிதை ) …… கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

கந்தசஷ்டி சிறப்புத் துதி 5 ம் நாள். 

கங்கையைச் சடையில் வைத்தார்
   மங்கையைப் பாகம் வைத்தார்
திங்களைச் சூடிக் கொண்டார் 
    திரு விளையாடல் செய்தார் 
தந்தையாய் அமைந்த போதும்
     தலைமையாய் இருந்த போதும்
எந்தையின் ஆசான் ஆகி
     இருந்ததும்  கந்தன் அன்றோ  !
 
ஊமையைப் பேச வைத்தர்
    உலகினை வலமும் வந்தார்
பாவலர் சபையின் முன்னே
    விளக்கமும் கொடுத்து நின்றார் 
பிரமனைச் சிறையில் இட்டார்
   பெருங் கர்வம் அடக்கிநின்றார் 
சரவணப் பொய்கை தோன்றி
    சன்மார்க்கம் தளைக்க வந்தார் !  

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *