கவிதைகள்
நின தடியைப் பற்றுகிறோம் நீ அருள்வாய் திருமுருகா!…. ( கவிதை ) கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

கந்தசஷ்டி துதி 4 ம் நாள்!….
நினைப்பவர் நெஞ்சில் கந்தன்
நீக்கற நிறைந்தே நிற்பான்
அடைக்கலம் என்றால் வேலன்
அறுமுகம் அருளைக் காட்டும்
திருப்புகழ் கேட்கக் கந்தன்
திருப்பினான் வாழ்வை என்னும்
கருத்தினை மனத்துள் வைத்தால்
கந்தனே தருவான் காட்சி !
ஈராறு கரத்தைக் கொண்டாய்
ஏங்குவார் துயர் துடைப்பாய்
கூர்வேலை யெடுத்துக் கையில்
கொடுமைகள் கொன் றொழிப்பாய்
நீராறும் கடல் உடுத்த
நீள் உலகை காக்கவையா
நின தடியைப் பற்றுகிறோம்
நீ அருள்வாய் திருமுருகா !
![]()