கவிதைகள்
நிம்மதி நிறையும் வாழ்வில்!…. ( கவிதை ) ….. கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

சஷ்டியை நோற்று நின்றால்
சங்கடம் அகன்றே ஓடும்
துஷ்டரும் பக்கம் வாரார்
துன்மதி தொலைந்தே போகும்
இஷ்டங்கள் இணைந்தே வாழ்வில்
இல்லமும் சிறந்தே ஓங்கும்
நிஷ்டையும் அமைந்தே நிற்கும்
நிம்மதி நிறையும் வாழ்வில் !
ஓடிடும் மனமே நில்லு
ஒருதரம் முருகன் நாமம்
நாடியே நவின்று பாரு
நமனுமே அஞ்சி நிற்பான்
வாடிடும் நிலையும் போகும்
வளமெலாம் வந்து சேரும்
நீடிடும் வாழ்வும் கிட்டும்
நினைத்திடு முருகன் நாமம் !
![]()