கவிதைகள்
ஆனந்தம் அங்கே மலரும்!…. ( கவிதை ) …… கவிஞர் காதேவ ஐயர் ஜெயராமசர்மா

கோபக் கனலை தணித்தால்
பாவம் அனைத்தும் ஒடுங்கும்
சாந்தம் பெருக்கி நின்றால்
சந்தோசம் நிலைத்து நிற்கும்
ஆசை அலைகள் எழுந்தால்
ஆணவம் அமர நினைக்கும்
நாளும் இறையை துதித்தால்
கோளும் வினையும் அகலும்
வாழும் நாளில் வழங்கு
வறுமை கண்டால் இரங்கு
நாறும் சேறை அகற்று
நரகம் சொர்க்கம் ஆகும்
பணிவோ நம்மை உயர்த்து
பழியோ நம்மைத் துரத்தும்
கனிவோ நம்மைக் காக்கும்
கசப்போ நம்மை அழிக்கும்
கொடுக்கும் கரங்கள் உயரும்
கெடுக்கும் கரங்கள் தாழும்
உழைக்கும் கரங்கள் வாழும்
உழைக்கா கரங்கள் வீழும் ![]()
உயர்வை தொட்டு விட்டால்
உளத்தை வெளிச்சம் ஆக்கு
அயர்வை வாழ்வில் அகற்று
ஆனந்தம் அங்கே மலரும்
![]()