கவிதைகள்

பிறந்த வாழ்வு பெருமையில் மூழ்கும்!… ( கவிதை )… மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

நாலும் தெரியாது இரண்டும் தெரியாது 

காலம் பறிபோகும் கணக்கும் புரியாது 

ஆழந் தெரியாது அகலம் விளங்காது

காலை விடும்வேளை கணக்கு மழிந்துவிடும் 

 

உறவும் தெரியாது பகையும் தெரியாது

வரவும் தெரியாது செலவும் புரியாது

குறைவும் தெரியாது நிறைவும் தெரியாது

முடிவு வரும்வேளை முழுதும் இருளாகும்

 

பக்தி உணராது புத்தி தெளியாது

சக்தி எதுவென்று சலனம் மிகுவாகும்

சித்தம் நிலைகுலைந்து செய்கை சிதைந்தோட

கத்தி முனையாக காலன் வருவானே

 

பிறந்த பிறப்பை பேறாய் எண்ணு

குறைந்த செயலை குழியிட்டு மூடு

நிறைந்த மனத்தை நித்தமும் தேடு

பிறந்த வாழ்வு பெருமையில் மூழ்கும்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *