கவிதைகள்

விநாயகனே நீவந்து விக்கினங்கள் போக்கிடையா!… கவிஞர் காதேவ ஐயர் ஜெயராமசர்மா.

விண்ணதிர மண்ணதிர 

விஞ்ஞானம் வளர்ந்திருக்கு

பெண்மையென ஆண்மையென

பேதமெலாம் அகன்றிருக்கு       

கண்ணான கண்ணியமோ

காணாமல் போயிருக்கு

கணபதியே வழிகாட்டி

கருணையெமக் கீந்திடுவாய்  !

 

அஞ்ஞானம் மேலெழுந்து

அனைத்தையுமே ஆள்கிறது

அறமென்னும் நிலையிப்போ

அருகியே போகிறது

கல்மனதைக் கொண்டுள்ளார்

கணக்கின்றி பெருகுகிறார்

கணபதியே கண்திறந்து

காட்டிடுவாய் நல்வழியை  !

 

விவாதமெனும் பேரலையே

வியாபித்து நிற்கிறது

வில்லங்கம் உலகெங்கும்

விசுவரூபம் கொள்கிறது

 
விரும்பாத பலவற்றை                                                
 
வீணர்வந்து கொட்டுகிறார்                                         
 
விநாயகனே நீவந்து                                              
 
விக்கினங்கள் போக்கிடையா !

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *