கதைகள்
நச்சுன்னு சொல்லு!…. ( குட்டிக்கதை )… சங்கர சுப்பிரமணியன்.

ராமா, நாத்திகவாதிக்கும் ஆத்திகவாதிக்கும் என்ன ஒரே வித்தியாசம் நச்சுன்னு சொல்லு பார்க்கலாம் என்றான் கோவிந்தன். அதற்கு ராமன்,
“எல்லாம் அவன் செயல் என்பான் ஆத்திகவாதி எல்லாம் நம் செயல் என்பான் நாத்திகவாதி”
என்றான்.
“அப்படீன்னா கொரோனாவும் அவன் செயல்தானா? அவனுக்கு என்ன கோபம்? அவன் ஆட்டத்தை இவ்வளவு இழப்புக்கு பின்பாவது நிறுத்தக்கூடாதா?”
இப்பவாவது எல்லாம் நம் செயலென்று புரிந்தால் சரி என்றான் ராமன்.
-சங்கர சுப்பிரமணியன்.
![]()