கதைகள்
ஐயோ, ஐயய்யோ!… ( குட்டிக்கதை )… சங்கர சுப்பிரமணியன்.

பரிசோதனயில் ஈடுபட்டிருந்த அந்த நபர் கையிலிருந்த கருவியை ஒரு அப்பாவி கிராமப்பெண்ணின் நெற்றியருகே கொண்டு செல்லவும் பதறிய அப்பெண்,
“ஐயோ, ஐயய்யோ என்னைக் காப்பாத்துங்க” என்று கத்தினாள்.
உடனே அக்கம் பக்கமிருந்து ஓடி வந்தவர்கள் என்னவென்று கேட்க அப்பெண்,
“நான் ஒன்னுமே செய்யலே. என்னைச் சுட வர்ராங்க” என்றாள்.
அதற்கு வந்தவர்கள் அவங்க உன்ன சுட வரலம்மா. உனக்கு கொரோனா இருக்கா இல்லையான்னு சோதனை பண்ணப் போறாங்க என்ற சொல்லவும் அப்பெண்,
“அத சொல்லிபுட்டு செய்யறதுதான. எடுத்த எடுப்புலய நெத்திக்கு நேரா நீட்டுனா?” என்றாள்.
-சங்கர சுப்பிரமணியன்.
![]()