கதைகள்
விரக்தி!…. ( குட்டிக்கதை )… சங்கர சுப்பிரமணியன்.

எதிர்பாராமல் நடந்த விபத்தால் தாமோதரன் மருத்துவ மனையில் உயிரிக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை பார்க்க வந்தவர்கள்,
“ஆண்டவனை வேண்டிக்க அப்பா பிழைப்பார்” என்றனர் மகனிடம்.
அதற்கு மகன்,
“அட போங்க. கொரோனாவுல
எவ்வளவோ பேர்
செத்துட்டாங்க. அவங்கள காப்பாத்த வராத கடவுளா எங்க அப்பாவ காப்பாத்தப் போறாரு. அதுலயும் இவரு நாத்திகம் பேசுறவரு. வெச்சு செஞ்சுடுவாரு, கடவுள்” என்று கவலையுடன் பதில் சொன்னான்.
-சங்கர சுப்பிரமணியன்.
![]()