கதைகள்

ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள்!…. ( குட்டிக்கதை ) …. கே.எஸ்.சுதாகர்.

(50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும்கதை)

ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள்!

“நீங்கள்தான் கட்லட் செய்து வருவதாக எல்லாருக்கும் சொல்லி இருக்கின்றேன். வரும்போது 50 கட்லட்டுகளுடன் வாருங்கள்.”

பிறந்தநாள் விருந்து தொடங்கியது.

பிளேற் ஒன்றிற்குள் பலகாரங்களைப் போட்டுக் கொடுத்தார்கள். கட்லட்டைக் கடித்த போது கசந்தது.

நண்பியைக் கூப்பிட்டேன். நாங்கள் கொண்டு வந்த கட்லட் எங்கே?

`அது’ எங்களுக்கு. நான் வேலை செய்யும் இடத்திற்கு கொண்டு போகப் போகின்றேன். ‘இது’ நான் செய்தது. உங்களுக்கு!

வேலை செய்யும் இடத்தில் அவருக்குப் புகழ். இங்கே எனக்கு?

நன்றி : வெற்றிமணி

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *