நான் காற்றுவாங்கப் போனேன் ஒரு கஷ்டம்வாங்கி வந்தேன்!… கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

நான் காற்றுவாங்கப் போனேன்
ஒரு கஷ்டம்வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கவில்லை
இப்போ கிலிக்குள் நிற்கிறேனே
நான் காற்றுவாங்கப் போனேன்
தொண்டை வரண்டு வருது
எனக்கு தும்மல்கூட வருது
உடலும் வலியாய் இருக்கு
இப்போ உள்ளம் பயத்திலிருக்கு
நான் காற்றுவாங்கப் போனேன்
எச்சில் விழுங்கும் போதும்
எனக்கு எரிச்சலாக இருக்கு
மூச்சை இழுத்து நிற்க
இப்போ சோர்வு அதிகமாச்சு
நான் காற்றுவாங்கப் போனேன்
பழத்தைக் கடித்துப் பார்த்தேன்
அதன் இனிப்புத் தெரியவில்லை
மலரை நுகர்ந்து பார்த்தேன்
அதன் மணமும் உணரவில்லை
நான் காற்றுவாங்கப் போனேன்
உடனே ஓடிச் சென்றேன்
எனக்கு உதவி நாடியங்கு
கொரனோ என்று சொன்னார்
குழம்பி அங்கு நின்றேன்
நான் காற்றுவாங்கப் போனேன்
வீட்டில் இருந்த வேளை
எனக்கு எதுவும் நிகழவில்லை
வீட்டை விட்டுச் சென்றேன்
இப்போ வினைக்குள் மாட்டிவிட்டேன்
நான் காற்றுவாங்கப் போனேன்
![]()