கவிதைகள்
ஓய்வறியா மனிதமனம் ஓலமிட்டு அழுகிறதே!…. கவிஞர். மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

முப்படையின் வலிமையினால் முழுவுலகம் அடக்கிநின்று
தப்பிதங்கள் பலசெய்து தலைமைநிலை தானெடுத்து
சொத்தெல்லாம் கொண்டுசென்று சொந்தநாட்டை வளமாக்கி
எப்பவுமே அரசுவென எண்ணிநின்ற தோர்நாடு !
தப்பிதங்கள் பலசெய்து தலைமைநிலை தானெடுத்து
சொத்தெல்லாம் கொண்டுசென்று சொந்தநாட்டை வளமாக்கி
எப்பவுமே அரசுவென எண்ணிநின்ற தோர்நாடு !
அந்நாடு ஆணவத்தை தன்னுடைமை ஆக்கியது
நீதியெனும் வார்த்தைக்கு தான்தலைமை தாங்கியது
கூட்டுச்சேர்ந்த நாடுகளை கொடைவழங்கும் நோக்கினிலே
வீட்டுக்காவல் போலவைத்து வெற்றிக்கொடி ஏற்றியது !
விழிப்புண்ட நாடெல்லாம் விடுதலையை நாடியது
கொழுப்புக்கொண்ட தலைமையது கொண்டகொள்கை மாற்றியது
நட்புறவு என்பதனை புதுக்கொள்கை ஆக்கிநின்று
பிரிந்துசென்ற நாட்டையெல்லாம் பிணைத்துநிற்க எண்ணியது !
பிரிந்துசென்ற ஓர்நாடு தலைமைதாங்கத் தொடங்கியது
வரங்கொடுத்த நாடங்கே வலைக்குள்ளே சிக்கியது
ஆணவத்தின் பேருருவாய் அந்நாடு உருவெடுத்து
ஆணவத்தின் பேருருவாய் அந்நாடு உருவெடுத்து
அகிலத்தை ஆட்டிவிடும் வழியோடத் தொடங்கியது !
பாரினையே உலுக்கிவைக்கும் போரொத்த கொரனோவால்
யார்பெரியார் யார்சிறியர் எனும்பேதம் அகல்கிறது
உலகாண்ட அரசெல்லாம் உருக்குலைந்து போகும்படி
கொரனோவின் தாண்டவம் கோரமாய் ஆகியதே !
அடிமைப்பட்ட நாட்டினது ஆலோசனை இப்போ
ஆணவத்தை அணைத்துநின்ற நாடுநோக்கி நிற்கிறது
கொரனோவின் வரவாலே கொடியதுன்பம் வந்தாலும்
அனைவருமே சமமென்னும் அர்த்தமிப்போ வெளியாச்சு !
பேரழிவைத் தந்துநிற்கும் பெருந்துயராம் கொரனோவால்
யாதுமே ஊரென்றும் யாவருமே கேளிரென்றும்
எண்ணிநிற்கும் சிந்தனையை எல்லோரின் மனங்களிலும்
கொடுங்கொரனே எனுமரக்கன் கொடுத்துவிட்டான் இப்போது !
இனங்கடந்து மதங்கடந்து மொழிகடந்து எதிரெயென
வரம்பின்றி வகைவகையால் உயிர்வதைத்து நிற்கிறது
உரங்கொண்ட விஞ்ஞானம் ஓடியோடித் திரிகிறது
ஓய்வறியா மனிதமனம் ஓலமிட்டு அழுகிறதே !
![]()