இலங்கை

சிறீதரனை நேரில் சந்தித்த ஐ.நா. ஒருங்கிணைப்பாளர்

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் – ஆண்ட்ரே பிரான்ச், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை நேற்று நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இந்தச் சந்திப்புத் குறித்து மார்க் – ஆண்ட்ரே பிரான்ச் தனது சமூக வலைத்தளங்களில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், நல்லிணக்க முயற்சிகளில் சமூகப் பங்கேற்பை வலுப்படுத்துவதற்கான கூட்டணிகளை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் அளித்து, வடக்கில் காணிகளை விடுவித்தல் மற்றும் அபிவிருத்தி தொடர்பான நிலைவரங்கள் தொடர்பில் இருவரும் விரிவாகக் கலந்துரையாடியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *