இலங்கை

விடுதலைப் புலிகள் விவகாரத்தில் இரட்டை வேட அரசியல்!; மொட்டுவின் ஆட்டத்திற்கு அநுர பதிலடி

விடுதலைப்புலிகள் அமைப்பு என்றவுடன் கடந்த காலங்களில் எதிர்ப்பை வெளியிட்ட அரசியல் தரப்பினர், இன்று தங்களுக்கு சாதகமான ஒருவர் என குரல் கொடுத்ததும் வீரன் என கூறிவருகின்றனர் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், தற்போது என்ன நடக்கின்றது என்பதை மக்கள் கண்டிருப்பார்கள். இவ்வளவு காலமும் மேடைகளில் குரல் கொடுத்த எதிர் தரப்பினரின் கருத்துக்கள் எல்லாம் பொய் ஆகிவிட்டது.

ஒருவர் தன்னை விடுதலைப்புலிகள் அமைப்பு சார்ந்தவர் என குரல் கொடுக்கிறார். அவரை மேடையில் ஏற்றி வைத்துள்ளார்கள்.

அந்த நபரை வேறு தரப்பினர் மேடைக்கு ஏற்றியிருந்தால் என்ன நடந்திருக்கும். விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆதரவு, நாட்டை பிரிக்க முயற்சி என கூறியிருப்பார்கள். இதுதான் இவர்களின் கேடுகெட்ட அரசியல். இவர்கள் எல்லாம் போலி தேசப்பற்றாளர்கள்.

ஒரு இனத்தின் வரலாற்றை மதிக்காத போக்கையே கொண்டுள்ளனர்.

இவர்கள் மக்களை மதத்தைஇ இனத்தை காட்டி ஏமாற்றியிருக்கின்றார்கள். உலகம் மாறியும் இவர்கள் இன்றும் மாறவில்லை” என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *