பலதும் பத்தும்
4 கண்களுடன் அதிசய தேங்காய்

கேரளாவின் பாலக்காட்டில் 4 கண்களுடன் காணப்பட்ட தேங்காயை பொதுமக்கள் ஆச்சரியமாக பார்த்து சென்றனர்.
பாலக்காடு மாவட்டம் மண்ணம்பட்டா பகுதியை சேர்ந்தவர் ஜெயராம், ராணுவ அதிகாரியாக இருக்கிறார்.
இவரது வீட்டில் உள்ள தேங்காய் மரத்தில் பறிக்கப்பட்ட காய் ஒன்று மற்றதை விட வித்தியாசமாக இருந்துள்ளது.
வெளிப்புறத்தில் நான்கு கண்களுடன் உள்புறத்தில் 2 சிறிய தேங்காய் காணப்பட்டது, வித்தியாசமாக இருந்த தேங்காயை பார்க்க அப்பகுதி மக்கள் குவிந்ததால் பரபரப்பானது.
![]()