பலதும் பத்தும்

அமெரிக்காவில் AI கல்லூரி அமைக்க ரூ.190 கோடி நன்கொடை வழங்கிய இந்திய தம்பதி

அமெரிக்காவில் AI கல்லூரி அமைக்க, இந்திய வம்சாவளி தம்பதி ரூ.190 கோடி நன்கொடை வழங்கியுள்ளனர்.

ரூ.190 கோடி நன்கொடை வழங்கிய இந்திய தம்பதி

அமெரிக்காவின் வடக்கு டெக்சாஸ் பல்கலைக்கழகம்(UNT) ஒரு பொது ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தில் சுமார் 44,000 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். 230 பட்டப்படிப்புகள் உள்ளது. இங்கு கடந்த ஆண்டு 13,000 க்கும் அதிகமானோர் பட்டம் பெற்றுள்ளனர்.

அமெரிக்காவில் AI கல்லூரி அமைக்க ரூ.190 கோடி நன்கொடை வழங்கிய இந்திய தம்பதி | Indian Origin Couple Donates 190 Cr For Us College

இந்நிலையில், இந்த பல்கலைக்கழகம் செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட பகுப்பாய்வுக் கல்லூரி ஒன்றை அமைப்பதற்காக இந்திய வம்சாவளி தம்பதியான விகாஸ் சின்ஹா மற்றும் அனுராதா 20 மில்லியன் டொலர்களை(இந்திய மதிப்பில் ரூ.190 கோடி) நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

இந்த நன்கொடையைப் பாராட்டும் விதமாக, UNT பல்கலைக்கழகம் அவர்களின் பெயரில் அனுராதா மற்றும் விகாஸ் சின்ஹா ​​செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட பகுப்பாய்வுக் கல்லூரியை அமைக்க உள்ளது.

இந்தப் புதிய கல்லூரி 2 கல்விப் பிரிவுகள் மூலம் செயல்படும். ஒரு பிரிவு அறிவார்ந்த அமைப்புகளை உருவாக்குவதிலும் செயல்படுத்துவதிலும் கவனம் செலுத்தும், மற்றொன்று மனித மற்றும் நிறுவனச் சூழல்களில் தகவல் மற்றும் அறிவார்ந்த அமைப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை ஆய்வு செய்யும்.

யார் இந்த விகாஸ் சின்ஹா அனுராதா?

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் குடிசார் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்ற விகாஸ் மற்றும் அனுராதா, மேல்படிப்புக்காக இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்றனர். இருவரும் புளோரிடா அட்லாண்டிக் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பைத் தொடர்ந்தனர்.

விகாஸ் 2023 ஆம் ஆண்டில் UNT-யில் தனது முனைவர் பட்டத்தைப் பெறுவதற்கு முன்பு, நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்திலும் பயின்றுள்ளார்.

விகாஸ் சின்ஹா ​​தற்போது பிராட்காம் நிறுவனத்தின் மெயின்ஃபிரேம் மென்பொருள் பிரிவின் துணைத் தலைவராக உள்ளார், மேலும் 2023 முதல் UNT தகவல் கல்லூரியின் தலைமைத்துவ வாரியத்தில் பணியாற்றி வருகிறார்.

அமெரிக்காவில் AI கல்லூரி அமைக்க ரூ.190 கோடி நன்கொடை வழங்கிய இந்திய தம்பதி | Indian Origin Couple Donates 190 Cr For Us College

இந்த நன்கொடை குறித்து பேசிய அவர், “கல்வி எங்கள் வாழ்நாள் முழுவதும் எங்களுக்குப் பல கதவுகளைத் திறந்து வைத்துள்ளது, அந்தக் கதவுகளை நாங்கள் மற்றவர்களுக்கும் திறந்து வைக்க விரும்புகிறோம்.

எங்களைப் பொறுத்தவரை, இந்தப் பரிசானது அந்த வாய்ப்பை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பதும், குடியேறிகள் அமெரிக்கக் கனவில் வெறுமனே பங்கேற்பவர்கள் மட்டுமல்ல, அதைக் கட்டமைக்கவும் உதவுகிறார்கள் என்பதை அங்கீகரிப்பதுமாகும்” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக 2024 ஆம் ஆண்டில், இந்த தம்பதியினர் ​​தரவு அறிவியல் துறையை நிறுவுவதற்காக 3 மில்லியன் டொலர்களை நன்கொடையை வழங்கினர். அத்துடன், கல்வி உதவித்தொகை, பேராசிரியர்கள், ஆராய்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகளை ஆதரிக்கும் அறக்கட்டளை நிதிகளையும் வழங்கினர்.

மீண்டும் 2025 ஆம் ஆண்டில் மற்றொரு பெரும் நன்கொடையை வழங்கி, தரவு அறிவியலுக்கான சின்ஹா ​​புத்தாக்க ஆய்வகத்தை உருவாக்கினர்.

இந்த நன்கொடையானது, மாணவர் வெற்றி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கம் தொடர்பான UNT-யின் இலக்குகளை முன்னெடுத்துச் செல்வதோடு, செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவுகளால் அதிகரித்து வரும் பணியிடத்திற்கு பட்டதாரிகளைத் தயார்படுத்தவும் உதவும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *