உலகம்

சிரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை!

திட்டமிட்ட கொலை, சித்திரவதை, தன்னிச்சையான தடுப்புக்காவல் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களுக்காக, பதவியிலிருந்து அகற்றப்பட்ட சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் (Bashar al-Assad) மற்றும் பல முன்னாள் அதிகாரிகளுக்கு  டமாஸ்கஸில் உள்ள நீதிமன்றம் ஒன்று செவ்வாயன்று (11) மரண தண்டனை விதித்தது.

நீதிபதி ஃபக்ருதீன் அல்-ஆர்யன் தலைமையில் நடைபெற்ற இந்த விசாரணையில், குடியரசு அரசுத் தலைமை வழக்கறிஞரின் ஆலோசகர் நீதிபதி ஹசன் அல்-துர்பா, இடைக்கால நீதிக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் அப்துல் பாசித் அப்துல் லத்தீஃப் மற்றும் ஆணையத்தின் உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றனர். 

சர்வதேச சட்ட மற்றும் மனிதாபிமான அமைப்புகளின் பிரதிநிதிகளும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Syrian court issues death sentences against Bashar al-Assad, former officials

மிக உயரிய முடிவெடுக்கும் அதிகாரியாக இருந்த நிலை மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட அரசு நிறுவனங்களை வழிநடத்தியதில் அவருக்கு இருந்த பங்கு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் பிற குற்றச்சாட்டுகளுக்காக அசாத் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்ததாக அல்-ஆர்யன் தெரிவித்தார்.

அதேவேளையில், ஆதேஃப் நஜிபுக்கும் நீதிமன்றம் மரண தண்டனை விதித்ததாக அல்-ஆர்யன் கூறினார்.

அல்-அசாத்தின் உறவினரான நஜிப், முன்னதாக சிரியாவின் தாரா (Daraa) நகரில் அரசியல் பாதுகாப்புப் பிரிவுத் தலைவராகப் பணியாற்றியவர் ஆவார்.

மேலும், தலைமறைவாக உள்ள மஹெர் ஹஃபெஸ் அல்-அசாத், ஃபஹத் ஜாசெம் அல்-ஃபிரெஜ், மொஹம் ஐமன் அயூஷ், லூவாய் அலி அல்-அலி, குசாய் இப்ராஹிம் மஹ்யூப், வஃபிக் சலே நாசர் மற்றும் தலால் ஃபாரெஸ் அல்-ஐசாமி ஆகியோருக்கு எதிராக நீதிபதி மரண தண்டனையை அறிவித்தார்.

முன்கூட்டியே திட்டமிட்டு வேண்டுமென்றே கொலை செய்தல் மற்றும் சித்திரவதையால் மரணம் விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளில் பிரதிவாதிகள் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்ததாக அல்-ஆர்யன் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button