உலகம்

ஜெர்மனி வான்வெளியில் பறந்த மர்ம பொருள் – விமானங்கள் திருப்பிவிடப்பட்டன

கிழக்கு ஜேர்மனிக்கு சென்ற விமானம் ஒன்று தரையிறங்கும்போது பாதுகாப்பு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது.

வான்வெளியில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் ஒன்று இனங்காணப்பட்டதை தொடர்ந்து  விமானங்கள்  திருப்பிவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது..

இதற்கமைய மல்லோர்காவிலிருந்து வந்த  பயணிகள் விமானமும், லீப்ஜிக்-ஹாலே (Leipzig-Halle) விமான நிலையத்திற்குச் செல்லவிருந்த  சரக்கு விமானங்கள் பலவும் வேறு இடங்களுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு பரிசோதனை செய்யும் ரோபோ ஒன்று சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு கள ஆய்வுகள் மேற்கொள்ளபட்டுள்ளன.

இந்த சம்பவத்தை தொடர்ந்து இன்று காலையில் விமான நிலைய செயற்பாடுகள் வழமைபோல் இடம்பெற்றுள்ளன.

இதேவேளை விமான நிலையங்கள், இராணுவத் தளங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு மேல் ட்ரோன்கள் பறக்கும் சம்பவங்களை ஜெர்மனியும் பிற ஐரோப்பிய நாடுகளும் பலமுறை குறிப்பிட்டுள்ளன என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button