பலதும் பத்தும்

முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்துடன் புதிய அத்தியாயம் தொடங்கிய நோஸ்கோவா

லண்டனில் நடைபெற்ற விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில், செக் குடியரசை சேர்ந்த லிண்டா நோஸ்கோவா வெற்றி பெற்று தனது முதலாவது கிரேண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், சக நாட்டு வீராங்கனையான கரோலினா முச்சோவாவை 6-2, 5-7, 6-3 என்ற நேர் செட் கணக்கில் நோஸ்கோவா வீழ்த்தினார்.

போட்டியின் தொடக்கத்தில் அபாரமாக செயற்பட்ட நோஸ்கோவா, இரண்டாவது செட்டில் 5-2 என முன்னிலை பெற்றிருந்தபோது பல வெற்றி வாய்ப்புகளைத் தவறவிட்டார்.

இதனைப் பயன்படுத்திக் கொண்ட முச்சோவா, இரண்டாவது செட்டைக் கைப்பற்றிப் போட்டியை விறுவிறுப்பாக்கினார்.

இருப்பினும், மூன்றாம் செட்டில் தனது பதற்றத்தைக் கட்டுப்படுத்திய 21 வயதான நோஸ்கோவா, மீண்டும் ஆதிக்கத்தைச் செலுத்தி வெற்றியைத் தனதாக்கிக்கொண்டார்.

இதன்படி விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் பட்டத்தை வெல்லும் மூன்றாவது செக் வீராங்கனை என்ற பெருமையை நோஸ்கோவா பெற்றுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button