வாழ்நாள் முழுவதும் சர்க்கரை நோய் வரக்கூடாதா?; இந்த ஒரு பானம் போதும்

சர்க்கரை நோய் வராமல் தடுப்பதற்கு, சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும் உதவும் பானம் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சர்க்கரை நோய்
இன்றைய காலத்தில் நீரிழிவு நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றது.
இன்றைய காலக்கட்டத்தில் நீரிழிவு நோய் என்பது வயது வரம்பின்றி அனைவருக்குமே வருகின்றது. இதற்கு நமது தவறான வாழ்க்கைமுறையும், தவறான உணவுமுறையும் தான் காரணம் என்று மருத்துவர்கள், நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஒருவருக்கு நீரிழிவு பாதிப்பானது ஏற்படும் பட்சத்தில் அவர் முழு கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். தான் எடுத்துக்கொள்ளும் உணவுகளிலும் கட்டுப்பாடுகளை மேற்கொள்வது மிக முக்கியமான ஒன்றாகும்.
ஏனெனில் நமது ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் பட்சத்தில் அது பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும். அந்த வகையில் இயற்கையில் ரத்த சர்க்கரை அளவை சரியாக வைத்துக்கொள்ளும் பானத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

ரத்த சர்க்கரை அளவு
ரத்த சர்க்கரை அளவு பரிசோதனையின் போது 120 இருந்தால் அவை சரியாக இருப்பதாக கூறப்படுகின்றது. ஆனால் உணவிற்கு முன்பு பரிசோதனை செய்யும் போது 100க்கு குறைவாக இருந்தாலோ, சாப்பாடு சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து எடுத்தால் 140 இருந்தால் சரியான அளவில் இருக்கின்றது.
அதுவே HbA1c பரிசோதனை எடுக்கும் போது 5.5க்கு உள்ளே இருந்தால் நல்லது. அதுவே 5.7க்கு மேல் போனால், சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புள்ளது. அதுவே 6.3-க்கு மேல் போனால் சர்க்கரை நோய் என்று அர்த்தமாம்.

தேவையான பொருட்கள்
சோம்பு – 1 டீஸ்பூன்
பிரியாணி இலை – 1
பட்டை – சிறிய துண்டு
செம்பருத்திப் பூ – 1
தண்ணீர் – 2 கப்
செய்முறை
பாத்திரம் ஒன்றில் 2 கப் நீரை ஊற்றி அத்துடன் சோம்பு, பிரியாணி இலை, பட்டை இவற்றினை சேர்த்து கொதிக்க வைக்கவும்.
இதனுடன் செம்பருத்து பூ இதழையும் சேர்த்து கொதிக்க வைக்கவும். கொதித்த தண்ணீர் 1 டம்ளராக வற்றிய பின்பு, அதனை வடிகட்டி வெதுவெதுப்பான நிலைக்கு வந்ததும் குடிக்கவும்.

குறிப்பு: இந்த பானத்தை வாரத்திற்கு இரண்டு முறை மட்டுமே எடுத்துக் கொள்ளவும். ஒரு மாதத்திற்கு எடுத்துக்கொண்டால் போதுமானது.
![]()