பலதும் பத்தும்

விண்வெளி ஆய்வில் தென்கொரியாவின் அடுத்த கட்டம்…!

தென்கொரியாவின் அடுத்த தலைமுறை புவி கண்காணிப்புச் செயற்கைக்கோளான நெக்ஸ்ட் ஜெனரேஷன் மிட்-சைஸ் செட்டிலைட் – 2 (No.2), அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள வேண்டன்பெர்க் விண்வெளித் தளத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் பால்கன் 9 ரொக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

500 கிலோ எடை கொண்ட இந்தச் செயற்கைக்கோள், நில மேலாண்மை மற்றும் பேரிடர் காலங்களில் துரித நடவடிக்கை எடுப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

கொரியா ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் (KAI) தலைமையிலான தனியார் விண்வெளித் தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இது உருவாக்கப்பட்டுள்ளது.

செயற்கைக்கோள்

இந்தச் செயற்கைக்கோள் புவியின் நிலப்பரப்பைத் துல்லியமாகப் படம் பிடித்துத் தேவையான தகவல்களை வழங்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்மூலம் தென்கொரியாவின் தனியார் விண்வெளித் தொழில்நுட்பம் உலகத் தரத்திற்கு உயர்த்தப்படுவதோடு பேரிடர் முகாமைத்துவத்தில் நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதே நாளில் தாய்வானின் ஃபாக்ஸ்கான் (Foxconn) நிறுவனமும் தனது இரண்டாம் தலைமுறை குறைந்த புவி சுற்றுப்பாதை (LEO) செயற்கைக்கோள்களை இதே ஸ்பேஸ் எக்ஸ் ரொக்கெட் மூலம் ஏவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button