இலக்கியச்சோலை

டாக்டர் நடேசன் எழுதிய மருத்துவ தடயவியல் நூல் கொழும்பில் வெளியீடு…  ஐங்கரன் விக்கினேஸ்வரா

இலங்கை நீதித்துறை மருத்துவ ஆலோசக அதிகாரியாக நீண்ட காலம் பணியாற்றிய டாக்டர். காசிநாதன் நடேசன் எழுதிய ‘நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட ஆதாரம்’ (PROOF BEYOND A REASONABLE DOUBT, Untold Story of the Medical Students Death By DR. KASINATHAN NADESAN) என்ற நூல்
மருத்துவ மாணவனின் மரணத்தின் சொல்லப்படாத ஆவணமாகும்.
இந்த நூல், 1994-ல் ஒரு சர்ச்சைக்குரிய மரணத்தை மீண்டும் ஆராய்கிறது. ஆரம்பத்தில் தற்கொலை எனக் கருதப்பட்ட இந்த வழக்கு, பின்னர் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு கொலை வழக்காக மாறியது.

இதன் தடயவியல் ஆய்வாளரான டாக்டர் நடேசன், பல தசாப்தங்களாக வெளிப்பட்ட சான்றுகள், விசாரணையில் ஏற்பட்ட தவறுகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்த ஒரு நுணுக்கமான விவரத்தை விளக்கமாக இந்த நூலில் எழுதியுள்ளார்.

Screenshot

28 ஆண்டுகளுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றம் அந்தத் தண்டனைகளை ரத்து செய்தது. இது குறைபாடுள்ள விசாரணைகள் மற்றும் நீதி தவறுகளால் ஏற்படும் ஆபத்துகளை எடுத்துக்காட்டுகிறது. இந்த சக்தி வாய்ந்த கதை, மருத்துவம், சட்டம் மற்றும் புலனாய்வுத் துறை வல்லுநர்களுக்கும், உண்மை, நீதி மற்றும் தடயவியல் நடைமுறையின் நேர்மை ஆகியவற்றில் அக்கறை கொண்ட எவருக்கும் அவசியமான ஒரு வாசிப்பு ஆகும்.

டாக்டர். காசிநாதன் நடேசன் இலங்கை நீதித்துறை மருத்துவ ஆலோசகர் அதிகாரியாக நீண்ட காலம் பணியாற்றி உள்ளார். அத்துடன்
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த சிரேஷ்ட தடயவியல் நிபுண ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.
மேலும் கோலாலம்பூர், மலாயப் பல்கலைக்கழக தடயவியல் மருத்துவப் பேராசிரியராகவும் செயல்பட்டுள்ளார்.

Screenshot

டாக்டர் நடேசன் எழுதிய மருத்துவ தடயவியல் நூலான நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட ஆதாரம் கொழும்பில் வெளியிடப்பட உள்ளது. இந்த நூல் வெளியீட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி மாண்புமிகு எஸ். துரைராஜா பி.சி. அவர்கள் கலந்து கொள்கிறார். கொழும்பு மாநகரில் எதிர் வரும் 9 மே 2026 மாலை 4:00 மணி முதல் 7:00 மணி வரை ரேணுகா ஹோட்டல், கொழும்பு 03 எனும் முகவரியில் நடைபெறும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button