பலதும் பத்தும்

முழு நிலவுக்கு மலர் நிலவு என பெயரிட்ட நாசா

வசந்த காலத்தில் மலர்கள் பூத்துக் குலுங்குவதை அடையாளப்படுத்துவதற்காக விசாக பூரணை அன்று இரவு தோன்றிய முழு நிலவுக்கு ‘மலர் நிலவு’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த நிலவின் புகைப்படத்தை வெளியிட்டு இதனை நாசா அறிவித்துள்ளது.

வசந்த காலத்தில் மலர்கள் பூத்துக் குலுங்குவதை அடையாளப்படுத்துவதற்காகவே இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை மே 30-ஆம் திகதி தோன்றவுள்ள முழு நிலவை ‘நுண்ணிய நிலவு’ (Micro Moon) என்றும் நாசா பெயரிட்டுள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button