கவிதைகள்

குயிலின் ஈனக்குரல் …. கவிதை …. முல்லைஅமுதன்

கூட்டை குரோதத்துடன் அகற்றியிருந்தோம்..
ஆனாலும்
குயிலின் ஈனக்குரல்
இன்னும்
சிதைந்த கூட்டைச் சுற்றி அலைகிறது.

எனக்காக
அவன் சாட்சியாய்ப் போனவனை
இப்படித்தான்
சுமந்தேன்.
அம்மா சொன்னாள்..மௌனமாக இரு..
எதையும் எழுதாதே..கோபங்கொள்ளாதே..

வில்லைகளை
இப்படித்தான் அழுத்தவேண்டும் என தோழனும் சொன்னான்..
குறி பிசகியது..
தோழர்கள் சுமக்கிறார்கள்.
இடுகாட்டின் கனதி அனைவரின் கண்ணீரில் தெரிந்தது..
இப்போது சொல்..
குயிலின் ஈனக்குரல் இடுகாட்டிலும் ஒலிக்கிறது..

முல்லைஅமுதன்
முல்லைஅமுதன்

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *