பலதும் பத்தும்

மலைப்பாம்புடன் நடனமாடிய யுவதி

கொழும்பில் நடைபெற்ற புத்தாண்டு நிகழ்வொன்றில் மலைப்பாம்பைத் தனது கழுத்தில் சுற்றியவாறு நடனமாடிய யுவதியைக் கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தாக்கல் செய்த முறைப்பாட்டை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வின் போது மலைப்பாம்பை ஆபத்தான முறையில் கையாண்டு நடனமாடியதன் மூலம், வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர் குற்றம் இழைத்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக வனவிலங்கு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு குறித்த யுவதிக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.

எனினும், அவர் அதனைப் புறக்கணித்து சமுகமளிக்கத் தவறியதாக அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதன்போது நீதவான், சந்தேக நபரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்டார்.

அத்துடன், இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த பிரபல ஒப்பனை கலைஞர் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்துகொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *