இலங்கை

சாரா ஜஸ்மின் உயிரோடு இருக்கிறார் – அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவிப்பு

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சந்தேக நபரான சாரா ஜஸ்மின் உயிரோடு இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த தகவலை கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேட்ட கேள்விக்கு பதலளிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

சாரா ஜஸ்மின் மரணமடைந்து விட்டதாகவே குறிப்பிடப்பட்டிருந்தது. அவர் இந்தியாவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட கருத்தில் எவ்வித உண்மையும் இல்லை.

அவர் தொடர்பில் தீவிர விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. சில தகவல்களை வெளிப்படுத்த முடியாது. அவை மேலதிக விசாரணைகளுக்கு தடங்கல்களை ஏற்படுத்தலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *