இலங்கை

இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொலை மிரட்டல் – நடவடிக்கை எடுக்காத பொலிஸார் மீது குற்றச்சாட்டு!

யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திற்கு செல்வதற்கு முன்னரே தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் இதுவரையில் பொலிசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா குற்றம் சுமத்தியுள்ளார்.

எனவே பொலிசார் தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் 15 தோட்டாக்களுடன் தனக்கு வழங்கப்பட்டுள்ள ஆயுதத்தை பயன்படுத்தவேண்டிய தேவை ஏற்படும் என ராமநாதன் அர்ச்சுனா மேலும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் கருத்து தெரிவித்த ராமநாதன் அர்ச்சுனா,

யாழ் மாவட்ட அபிவிருந்த்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திற்கு செல்வதற்கு முன்னர் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

அது தொடர்பாக நான் பொலிஸாரிடம் தெரிவித்தேன்.

ஆனால் பொலிசார் அதனை முறையாக விசாரணை செய்யவில்லை.

கொலை மிரட்டல் விடுத்தவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு எப்போது விசாரணைக்கு வரமுடியும் என கேட்டிருந்தனர்.

அவர்கள் கிறிஸ்மஸ் உள்ளதாகல் தற்போது வரமுடியாது என கூறியிருந்தனர்.

எவவே அவர்களை 19ஆம் திகதி வருமாறு பொலிசார் கூறியிருந்தனர்.

கொலை மிட்டல் விடுக்கப்பட்டுள்ள எனக்கு நீதி கிடைக்கவில்லை.

மாறாக நான் யாரையாவது தவறுதலாக அழைத்து பேசியிருந்தால்.

பொலிசார் உடனடியாக என்னை கைது செய்திருப்பார்கள்.

வீதியிலுள்ள மஞ்சள் கோட்டில் என் வாகனத்தை நிறுத்தியதற்காக
நான் கைது செய்யப்பட்டேன்.

தேசிய மக்கள் சக்தி எம்.பி.க்கு இவ்வாறு கொலை மிரட்டல் விடுக்கப்படடிருந்தால்
பொலிசார் உடனடியாக நடவடிக்கை எடுத்திருப்பாகர்கள்.

கஞ்சாவை பறிமுதல் செய்யச் சென்ற அப்பாவி பொலிஸ் அதிகாரிக்கு
இன்று என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால் நான் பாதுகாப்பாக இல்லாவிட்டாலும்
எனக்கு பதினைந்து தோட்டாக்கள் கொண்ட ஆயுதம் வழங்கப்பட்டுள்ளது.
நாங்கள் நாட்டைக் கட்டியெழுப்ப வந்துள்ளோம், மக்களைக் கொல்ல முடியாது.
ஜனாதிபதி அனுரகுமார மக்களைக் கொல்லச் சொல்கிறாரா…

யாராவது என்னிடம் வந்து என்னைக் கொல்லப்போகிறேன் என கூறினால்
பொலிசாரிடம்தான் நான் முறையிடுவேன்.

நான் அனுரகுமாரவிடம் போன் செய்து சொன்னேன்.

சட்டம் அமல்படுத்தப்படவில்லை என..அவர் ஆனந்த விஜேபாலனாயவிடம் கூறினார்.
ஆனாலும் சட்டம் அமல்படுத்தப்படவில்லை.

இந்த நிலை தொடர்ந்தால் பின்னர், நான் சுட வேண்டியிருக்கும்… ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள
யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணிபுரியும்
மருத்துவரைக் காப்பாற்ற சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ இப்போது மிகவும் முயற்சி செய்கிறார்…
வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இதற்கு உதவுகிறார்கள்.

அவர்களுக்கு அரசாங்கத்தின் ஆதரவு உள்ளது,
எனவே அவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள் என தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *