உலகம்

ரஷ்யாவை எதிர்த்துப் போராட இராணுவத்தில் இணைந்த 70,000 உக்ரேனிய பெண்கள்

உக்ரைன்(Ukraine) மீதான ரஷ்யாவின்(Russia) படையெடுப்பு நான்காவது ஆண்டை நெருங்கி வரும் நிலையில், 2025ம் ஆண்டில் உக்ரைனின் ஆயுதப் படைகளில் அதிக பெண்கள் பணியாற்றி வருகின்றனர்.

2025 ஆம் ஆண்டில் 70,000 க்கும் மேற்பட்ட பெண்கள் தற்போது உக்ரைனின் இராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர், இது 2022 ஐ விட 20% அதிகமாகும் என்று உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி(Volodymyr Zelensky) வழங்கிய சமீபத்திய மதிப்பீடுகளின்படி, 2022ம் ஆண்டு ரஷ்யாவின் முழு அளவிலான
படையெடுப்பிலிருந்து 45,000 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும்
குறைந்தது 390,000 பேர் காயமடைந்துள்ளனர்.

இதனால் ஆண் இராணுவ வீரர்களின் பற்றாக்குறையால், கடந்த சில மாதங்களாக இராணுவம் அதன் ஆட்சேர்ப்பு பணிகளை பெண்களுக்கு ஏற்றவாறு வடிவமைத்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *