உலகம்

பிரிட்டனில் ராணுவ முகாமில் அகதிகளைத் தங்க வைப்பதற்கு எதிராக போராட்டம்!

பிரிட்டனில் சட்டவிரோதக் குடியேற்றம் தொடர்பான ‘கோல்டன் டிக்கெட்’ (Golden Ticket) சலுகை முறையை முடிவுக்குக் கொண்டுவருவதாக உள்துறைச் செயலாளர் உறுதியளித்துள்ள நிலையில், ஒரு நகரத்தின் எல்லையில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் குடியேறிகளைத் தங்கவைக்கும் திட்டத்துக்கு எதிராக நூற்றுக்கணக்கான உள்ளூர் மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர் .

பிரிட்டனில் ஒரு நகரத்தின் விளிம்பில் அமைந்துள்ள ஒரு பழைய இராணுவ முகாம் (Army Camp) வளாகத்தில் அகதிகளைத் தங்க வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

நூற்றுக்கணக்கான உள்ளூர்வாசிகள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். இத்திட்டம் அப்பகுதியில் உள்ள பொதுப் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மற்றும் சமூகச் சேவைகள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோதக் குடியேற்றவாசிகளுக்கான செலவுகளைக் குறைக்கும் ஒரு பகுதியாக, அரசு ஹோட்டல்களுக்குப் பதிலாக, பயன்படுத்தப்படாத இராணுவ முகாம்கள் மற்றும் பெரிய தளங்களில் அவர்களைத் தங்க வைக்கத் திட்டமிட்டுள்ளது.

போராட்டங்கள் நடக்கும் இந்த நேரத்தில், பிரிட்டன் உள்துறைச் செயலாளர் தனது கடும் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

சட்டவிரோதமாக பிரிட்டனுக்குள் வருபவர்களுக்கு ‘கோல்டன் டிக்கெட்’ வழங்குவது போல், அவர்கள் சட்டப்படி நாட்டில் நிரந்தரமாகத் தங்கலாம் என்ற நிலையை முடிவுக்குக் கொண்டு வருவதாக அறிவித்தார்.

அதேவேளை சிறிய படகுகள் மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து வருபவர்களைத் தடுக்கவும், குடியேற்றவாசிகளை விரைவாக வெளியேற்றவும் கடும் சட்டங்கள் கொண்டு வரப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *