ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி

நெய்டாவின் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளின் தரம் குறித்து அச்சம் சமீபத்தில் இணையத்தில் வெளியான காணொளி ஒன்றுக்கு பிறகு அதிகரித்துள்ளது.
நொய்டாவில் அதிகரிக்கும் குடியிருப்பாளர்களின் கவலை
ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளின் தரம் குறித்த கவலைகள் நொய்டா மக்களிடையே அதிகரித்துள்ளது.
அந்த வீடியோவில், நபர் ஒருவர் கோடிக்கணக்கில் மதிப்பு கொண்ட குடியிருப்பின் சுவரில் சாதாரண பென்சிலை சிறிய சுத்தியால் அடித்து உள்ளே செலுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
மேலும் வீடியோவில் குடியிருப்பாளர் தனது திகைப்பையும் வெளியிட்டுள்ளார், “சுவரில் நான் பென்சிலை சிறிய சுத்தியல் கொண்டு தட்டினேன், அது எந்தவொரு சிரமமும் இன்றி அப்படியே உள்ளே சென்று விட்டது, இதற்கு ட்ரில் இயந்திரம் கூடத் தேவையில்லை என தெரிவித்துள்ளார்.

வியப்பை ஏற்படுத்தும் வீட்டின் விலை
இந்த வீடியோ எடுக்கப்பட்ட குடியிருப்பின் விலை தோராயமாக ரூ.1.5 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராமில் வேகமாக பரவி வரும் இந்த வீடியோ, கடுமையான விமர்சனத்தையும், விவாதத்தையும் தூண்டியுள்ளது.
![]()