சகல தரப்பையும் உள்ளீர்த்துக்கொள்ளும் முயற்சியுடன் சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட்

பாராளுமன்றத்தில்வெள்ளிக்கிழமை .தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சரான ஜனாதிபதி அநு ரகுமார திசாநாயக்க சமர்ப்பித்து உரையாற்றினார் அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டதில் பிரகாசமானஎதிர்காலத்திற்கான நம்பிக்கை யை ஏற்படுத்தும் கணிசமான முன்மொழிவுகள்இடம்பெற்றிருக்கின்றபோதும் இது சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார சீர்திருத்த நிகழ்ச்சி நிரலுக்கு அதிகளவுக்கு இசைந்து போகும் என்று எதிரணி உறுப்பினர்கள் சிலர் உடனடியாகவே விமர்ச்சித்தனர்.
2022 ஆம் ஆண்டில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட பிறகு, இலங்கை ஐ எம் எவ் உடன் ஒரு திட்டத்தை மேற்கொண்டது. அதன் பின்னர்ஐ எம் எவ். வின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் எதிர்பார்க்கப்பட்ட இலக்குகளை அடைய நாடு அதன் தேசிய வரவு செலவுத் திட்டங்களைத் தயாரித்துவருவதாக அவர்கள் கூறுகின்றனர் ..ஆனால் வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீட்டு சட்டத்தை முன்மொழிந்த ஜனாதிபதி திசாநாயக்க, வரலாற்றின் வலி மிகுந்த நிகழ்வுகள் இந்நாட்டைக் கட்டியெழுப்புமாறு எமக்கு கூறுகின்றன. கடந்த காலத்தில் முழுமையான இழப்புகளும் புறக்கணிப்பும் ஒடுக்குதலும் அச்சுறுத்தல்களும் கர்ச்சிப்புக்களும் இந்நாட்டை கட்டியெழுப்புவதற்கே எமக்கு கூறுகின்றன.
கடந்தகாலப் பிள்ளைகளின் தலைமுறை உண்மையான பெருமையுடன் கூடிய அவர்களின் தாய்நாடான இந்நாடுபற்றி பேசமுடியாமலிருக்கும் ஆனாலும், எதிர்கால தலைமுறை அத்தகைய சோகத்திலிருந்து விடுபட்டிருக்க வேண்டும்.
மிகவும் அழகான நாடொன்றுக்காக ஒவ்வொரு கனவையும் தியாகம் செய்து அவ்வழகிய நாடு பிறப்பதற்கு முன்னரே மரணித்த ஒவ்வொரு இதயமும் இந்நாடு அழகான நாடொன்றாக தோற்றம் பெறுவதைக் காணும் கனவைக் கொண்டிருந்தது.
அத்தகைய தூய்மையான மக்களின் இறக்கின்ற விருப்பங்களை நாமாக பொறுப்பேற்றுள்ளோம். கடவுளின் வாசகமாக மிகவும் விருப்பத்துடன் அவ்வெண்ணங்களை நாம் நிறைவு செய்கின்றோம்.
இருண்ட மேகங்களுக்கப்பால் சூரியன் மிளிர்கின்றது என்றும் இருண்ட மேகங்கள் விலகிச் செல்கின்றதென்றும் நாம் நம்புகின்றோம். இருளின் மத்தியில் ஒளிக்கீற்று நிச்சயம் பிரகாசிக்கும் என நாம் நம்புகின்றோம்.
எமது பயணத்தில் நாம் செல்கின்றோம் என்று ஞாபகப்படுத்துகின்றோம், எதிரிகளின் வெறித்தனமான குரள்களை நாம் செவிமடுக்க மாட்டோம். இந் நாட்டின் பிரசைகளின் தீர்க்கமான மற்றும் நம்பிக்கை மிக்க எதிர்பார்ப்புகளை மாத்திரம் நாம் அவதானிப்போம். என்று குறிப்பிட்டிருக்கிறார்.
எவ்வாறாயினும் வருமான வரி மற்றும் வாகன இறக்குமதி வரி உள்ளிட்ட பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரிகளில் அதிக வருமானம் இருப்பதால், இலங்கை 2025 வருவாய் இலக்கை திருத்தியுள்ளது, அதே நேரத்தில் அரசாங்கம் இந்த ஆண்டு பொது முதலீட்டைக் குறைத்துள்ளது என்று புதிய பட்ஜெட் ஆவணம் வெளிப்படுத்துகிறது .
அரசாங்கம் 2025 ஆம் ஆண்டிற்கான மொத்த வரி வருவாயை 4,590 பில்லியன் ரூபாவாக அடைவதை இலக்காகக் கொண்டிருந்தது.
இருப்பினும், வருமான வரி மற்றும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரிகளின் இலக்குகளை அதிகரிப்பதன் மூலம் வரி வருவாய் 2.9 சதவீதம் அதிகரித்து 4,725 பில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளதாக தரவு காட்டுகிறது.
2025 ஆம் ஆண்டிற்கான வருமான வரி இலக்கு 3.7 சதவீதம் அதிகரித்து 1,210 பில்லியன் ரூபாயாகவும், பொருட்கள் மற்றும் சேவை வரிகள் மீதான இலக்கு 6.5 சதவீதம் அதிகரித்து 2,953 பில்லியன் ரூபாயாகவும் உயர்ந்துள்ளதாக சமீபத்திய பட்ஜெட் ஆவணம் காண்பிக்கிறது .
2025 ஆம் ஆண்டிற்கான மொத்த மதிப்பிடப்பட்ட செலவினத்தை 7,190 லிருந்து 7,057 பில்லியன் ரூபாயாக அரசாங்கம் குறைத்துள்ளது, ஏனெனில் மூலதன முதலீட்டை 21.4 சதவீதம் குறைத்து 1,033 பில்லியன் ரூபாயாகக் குறைத்துள்ளது.
இதன் விளைவாக, அரசாங்கம் அதன் 2025 பட்ஜெட் பற்றாக்குறையை முன்னர் மதிப்பிடப்பட்ட 2,200 பில்லியன் ரூபாயிலிருந்து (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.7 சதவீதம்) 1,448 பில்லியன் ரூபாயாக (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5 சதவீதம்) குறைத்துள்ளதாக உத்தியோகபூர்வ பூர்வ ஆவணங்கள் காட்டுகின்றன.
ஆனாலும் பொருளாதாரம் வலுப்பெற்றுள்ளது, அதே நேரத்தில் பணவீக்கம் ஒற்றை இலக்கத்திற்குத் திரும்பியுள்ளது. தற்போது அது குறைவாகவே உள்ளது. இலங்கையில் இப்போது 6.1 பில்லியன் அமெரிக்க டொ லர்கள் அளவிலான வெளிநாட்டு இருப்பு உள்ளது. மேலும், நாடு 2.3 சதவீத முதன்மை உபரியை அடைந்தது. வாகனங்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கியதன் மூலம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 15 சதவீத வருவாய் இலக்கை அடைய முடிந்தது.
இலங்கை வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க வரிச் சட்டங்களை உருவாக்கி வருகிறது, இது ஆண்டு இறுதிக்குள் ஐ எம் எவ் இன் ஆறாவது தவணையான 347 மில்லியன் டொலரை பெறுவதற்கான மறுசீரமைப்புகளின் ன் ஒரு முக்கிய அங்கமாகும்.
இருப்பினும்,.பொருளாதார மாற்றத்தை அடைய அரசாங்கம் இப்போது கடினமாக வென்ற நிலைத்தன்மையை கட்டியெழுப்ப வேண்டியுள்ளது.
![]()