இலங்கை

மஹிந்தவின் முன்னாள் தலைமை பாதுகாப்பு அதிகாரிக்கு பிணை!

சட்டவிரோத சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றம்  அவரை ரூ.50,000 ரொக்கப் பிணையிலும், தலா ரூ.1 மில்லியன் மதிப்புள்ள மூன்று சரீரப் பிணையிலும் விடுவித்தது.

நீதிமன்றம் நெவில் வன்னியாராச்சிக்கு வெளிநாட்டுப் பயணத் தடையையும் விதித்ததுடன், வழக்கை எதிர்வரும் ஜனவரி 16 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் உத்தரவிட்டது.

28 மில்லியன் ரூபா மதிப்புள்ள சட்டவிரோத சொத்துக்களை குவித்ததாகக் கூறப்படும் விசாரணைகள் தொடர்பாக, நெவில் வன்னியாராச்சி ஒக்டோபர் 02 ஆம் திகதி இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *