உலகம்

அவுஸ்திரேலிய முன்னாள் அமைச்சர் கேரத் வார்டுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை!

அவுஸ்திரேலியாவின் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினரும், நியூ சவூத் வேல்ஸ் மாலியத்தின் முன்னாள் அமைச்சருமான கேரத் வார்டுக்கு (Gareth Ward) சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இரு இளைஞர்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணையிலேயே பரமட்டா மாவட்ட நீதிமன்றத்தால் இன்று மேற்படி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஐந்து வருடங்கள் மற்றும் 9 மாதங்கள் அவர் சிறை தண்டனையை எதிர்கொள்ள வேண்டும்.

குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் நிகழ்நிலை மூலமே நீதிமன்றத்தில் முன்னிலையானார். பாதிக்கப்பட்ட இரு இளைஞர்களும் இணையவழியில் முன்னிலையாகி சாட்சியமளித்தனர்.

இதன் பின்னரே நாடாளுமன்ற உறுப்பினர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு, சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 4 வருடங்கள் சிறை தண்டனையை எதிர்கொண்ட பின்னரே அவர் பிணை கோரி விண்ணப்பிக்க முடியும்.

எனினும், மாவட்ட நீதிமன்றத்தின் இந்த முடிவை மேன்முறையீடு செய்யப்போவதாக நாடாளுமன்ற உறுப்பினரின் சட்டத்தரணிகள் குழு தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *