இலங்கை

மைத்திரியிடம் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு 05 மணி நேரம் விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையானார்.

சுமார் ஐந்து மணி நேரம் நீடித்த வாக்குமூலத்தை வழங்கிய பின்னர், முன்னாள் ஜனாதிபதி பிற்பகல் 2:00 மணியளவில் ஆணைக்குழுவிலிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்த ஒரு நிறுவனத்தில் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பாக வாக்குமூலம் அளிக்க முன்னாள் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *