உலகம்

இந்தியாவில் 11 குழந்தைகள் உயிரிழப்பு- தடைசெய்யப்பட்ட மருந்தை பரிந்துரைத்த வைத்தியர் கைது!

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் 11 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இருமல் மருந்தை பரிந்துரைத்த வைத்தியர் பிரவீன் சோனி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்திலும், ராஜஸ்தானின் சிகாரி எனும் பகுதியிலும் கடந்த 15 நாட்களாக, 1 – 6 வயதுக்குட்பட்ட 11 குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்துள்ளன.

குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் அவர்கள் ‘கோல்ட்ரிப்’ மற்றும் ‘நெக்ஸ்ட்ரோ’ ஆகிய இருமல் மருந்துகளை உட்கொண்டமை தெரியவந்துள்ளது.

இறந்தவர்களில் பெரும்பாலான குழந்தைகள் பராசியாவில் உள்ள குழந்தை நல வைத்தியரான பிரவீன் சோனியின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் குறித்த வைத்தியர் தடைசெய்யப்பட்ட குறித்த இருமல் மருந்தினை பரிந்துரைத்துள்ளார்.

இதேவேளை, மேற்குறித்த இரு மாநிலங்களிலும், இந்த மருந்து உட்பட 15க்கும் மேற்பட்ட மருந்துகளை விற்பனை செய்ய முன்னதாகவே தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கோல்ட்ரிப் மருத்தை தயாரித்த நிறுவனத்திற்கு எதிராக மத்தியப் பிரதேச அரசு வழக்குப் பதிவு செய்த நிலையில் தற்போது குறித்த மருந்தை பரிந்துரைத்த வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *