பலதும் பத்தும்

இலங்கை சிறைகளில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள 19 பெண் கைதிகள்!

இலங்கையில் தற்போது மொத்தம் 19 பெண்கள் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர் என்று சிறைச்சாலைகள் செய்தித் தொடர்பாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் 24 பெண்கள் தற்போது ஆயுள் தண்டனை அனுபவித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

225 பெண்கள் தண்டனை பெற்ற கைதிகள் என்றும் 1,304 பெண்கள் தடுப்புக் காவலில் உள்ளனர்.

இலங்கை முழுவதும் உள்ள 10 சிறைகளில் உள்ள 1,529 பெண்களில் இவர்களும் அடங்குவர் என்று ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button