உலகம்

ஐரோப்பாவில் ரஷ்யாவின் அணு ஆயுத அச்சுறுத்தல்கள் – அச்சத்தில் மேற்கத்திய நாடுகள்

ஐரோப்பாவில் ரஷ்யாவின் அணு ஆயுத அச்சுறுத்தல்கள், ட்ரோன்கள் மற்றும் ஜெட் விமானங்கள் மூலம் மேற்குத் தரப்பை சோதனை செய்யும் முயற்சிகள் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலைமையில் மேற்கத்திய நாடுகளில் தலைவர்கள் மத்தியில் சமாதானம் குறித்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

“நாங்கள் போரில் இல்லை. ஆனால் நிம்மதியாக வாழ முடியவில்லை” என ஜெர்மனி சான்ஸ்லர் பிரீட்ரிக் மெர்ஸ், பெர்லினில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்தார்.

எனினும் மேற்குலம் ஏற்கனவே ரஷ்யாவுக்கு எதிராகப் போரில் ஈடுபட்டுவிட்டதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை, தற்போதைய நிலைமையை “மறைபோர்” (shadow war) என பிரித்தானிய முன்னாள் உளவுத்துறை இயக்குநர் எலிசா மன்னிங்ஹாம்-புல்லர், விவரித்துள்ளார்.

சைபர் தாக்குதல்கள், நாசவேலை, உளவுத்துறை நடவடிக்கைகள் மற்றும் மக்கள் மீதான தாக்குதல்கள் ஆகியவை இப்போரின் வடிவங்களாக உள்ளன என அவர் கூறுகிறார்.

இதேவேளை, ரஷ்யா மேற்கு நாடுகளுடன் ஏற்கனவே போரில் ஈடுபட்டுள்ளது. ஆனால் பலர் அதை உணர மறுக்கின்றனர் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றிய பியோனா ஹில் தெரிவித்துள்ளார்.

சோவியத் ஒன்றியம் சாய்ந்த பிறகு ரஷ்யாவை ஒரு கூட்டாளியாகப் பார்த்த மேற்கு நாடுகள், இன்று அதன் திடமான எதிர்மறை போக்கை நேரில் அனுபவிக்கின்றன.
உண்மையான போர் தொடங்கவில்லை என்றாலும், அதன் சின்னங்களும் தாக்கங்களும் ஐரோப்பாவை நாள்தோறும் சுற்றியழிக்கத் தொடங்கியுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *