இந்தியா

மீண்டும் கரூர் செல்கின்றார் விஜய்

கரூர் வேலு​சாமிபுரத்​தில் கூட்ட நெரிசல் ஏற்​பட்​ட நிலை​யில், நேற்று முன்தினம் இரவே திருச்சி வந்த விஜய், தனி விமானம் மூலம் உடனடி​யாக சென்னை திரும்​பி​னார்.

பிரச்​சார கூட்​டத்​தில் திடீரென நெரிசல் ஏற்​பட்​டதற்​கான காரணம், பாதிக்​கப்​பட்​ட​வர்​களின் குடும்​பங்​களுக்கு செய்ய வேண்​டிய உதவி​கள், அவர்​களது குடும்​பத்​தினரை சந்​தித்து ஆறு​தல் கூறு​வது ஆகியவை தொடர்​பாக கட்சி நிர்​வாகி​களு​டன் விஜய் ஆலோ​சனை நடத்​தி​னார்.

இதையடுத்​து, உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினரை நேரில் சந்​தித்து ஆறு​தல்கூறு​வதற்​காக விஜய் மீண்​டும் கரூர் செல்ல அனு​மதி கேட்​டு, கட்​சித் தரப்​பில் பொலிஸில் மனு கொடுக்​கப்பட உள்​ள​தாக​வும்கூறப்​படு​கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *