பலதும் பத்தும்

82 வயதில் கராத்தே பயிற்சி வழங்கும் வீரமணி

தற்காப்புக் கலையான  கராத்தேயில் களறி என்ற கலையை தமது 82 வயதிலும் கற்பிக்கும் பெண்மணி ஒருவர், தாம் இந்தக் கலையில் இருந்து ஓய்வுப் பெறப்போவதில்லை என்று கூறியுள்ளார்.

தாம் இறக்கும் வரை கராத்தே பயிற்சி செய்யப்போவதாக மீனாட்சி ராகவன் என்ற இந்த பெண்மணி கூறியுள்ளார்.

இதன்படி, இந்த கலை வடிவத்தை பயிற்சி செய்யும் மற்றும் கற்பிக்கும் உலகின் மிக வயதான பெண் என்று மீனாட்சி ராகவன் கருதப்படுகின்றமையானது சிறப்பம்சமாகும்.

இந்தியாவில் மீனாட்சி அம்மா  நகரங்களில் நிகழ்ச்சிகளை நடத்துகின்ற  அதேநேரம், 1950 ஆம் ஆண்டு தனது கணவரால் நிறுவப்பட்ட தனது சொந்த களரி பாடசாலையை நடத்துகிறார்.இதில் மாணவர்கள் குச்சி சண்டை , ஆயுத சண்டை,  ஆயுதம் ஏந்தாத சண்டையை உள்ளடக்கிய மிக உயர்ந்த நிலை வரை கற்றுக்கொள்கிறார்கள்.

6 ஆம் நூற்றாண்டில், இந்திய புத்த துறவி போதிதர்மர் இந்த நுட்பங்களை துறவிகளுக்கு அறிமுகப்படுத்தினார், இது மிகவும் பிரபலமான சீன தற்காப்புக் கலையின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது என்றும் புராணக்கதைகள் கூறுகின்றன. மீனாட்சி அம்மா 75 ஆண்டுகளுக்கு முன்னர், இந்த கலை பயிற்சியில் ஈடுபட்டதை நினைவுப்படுத்துகின்றமையும் குறிப்பிடத்தக்கது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button