பலதும் பத்தும்

ரயன்ஏர் விமானம் அவசரத் தரையிறக்கம்

இத்தாலியின் மிலான் நகரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரயன்ஏர் விமானம் ஜெர்மனியின் தெற்குப் பகுதியில் அவசரமாகத் தரையிறங்கியது.

இடியுடன் கூடிய கனமழை காரணமாக விமானம் மிகக் கடுமையாக ஆட்டங்கண்டதால் இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது.

இதனால் ஒன்பது பயணிகள் காயமடைந்ததாக ஜெர்மானியக் காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஜெர்மானியத் தலைநகர் பெர்லினிலிருந்து புறப்பட்ட அந்த விமானம் மியூனிக் நகரிலிருந்து ஏறத்தாழ 115 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மெம்மிங்கன் நகரில் பத்திரமாகத் தரையிறங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

காயமடைந்தோரில் பெண் ஒருவரும் அவரது இரண்டு வயது குழந்தையும் 59 வயது பெண்மணியும் அடங்குவர்.

மூவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதுடன், காயமடைந்த மற்றவர்களுக்கு விமானத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.

பாதிப்படைந்த பயணிகளிடம் ரயன்ஏர் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.

பின்னர் மிலான் செல்ல பயணிகளுக்கு இலவசப் பேருந்துச் சேவை வழங்கப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button